/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பூச்சி மருந்து குடித்து வாலிபர் தற்கொலை
/
பூச்சி மருந்து குடித்து வாலிபர் தற்கொலை
ADDED : பிப் 09, 2024 11:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : திண்டிவனத்தில் வாலிபர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திண்டிவனம், மயிலம் ரோடு, இந்திரா நகரைச் சேர்ந்தவர் வேலு மகன் ஜெய்ஹிந்த், 26; டிப்ளமோ படித்துள்ளார். வேலையில்லாமல் வீட்டில் இருந்தார்.
இவர், கடந்த சில தினங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
கடந்த 7ம் தேதி இரவு பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார்.
உடன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று முன்தினம் இறந்தார்.
இதுகுறித்து அவரது தந்தை வேலு அளித்த புகாரின் பேரில், திண்டிவனம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.