நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : கோவில் சாரத்தில் இருந்து தவறி கீழே விழுந்த கொத்தனார் இறந்தார்.
விழுப்புரம் அடுத்த ஆலாத்துாரை சேர்ந்தவர் சண்முகம், 62; கொத்தனார். இவர், தனது வீட்டின் அருகில் புதியதாக கட்டிவரும் கோவிலில், சாரத்தின் மீது ஏறி வேலை செய்தார்.
அப்போது, தவறி கீழே விழுந்ததில், படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார்.
விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.