
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தென்பசியார் கிராமத்தில், சுயம்பு நாக அங்காளம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது.
விழா, கடந்த 17ம் தேதி கொடியற்றுத்துடன் துவங்கியது. கடந்த இரு தினங்களுக்கு முன், மதியம் 1:00 மணிக்கு சாகை வார்த்தல் நடந்தது. இரவு 7:00 மணிக்கு தீமிதி விழா நடந்தது. பக்தர்கள் அலகு குத்தி தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
விழா ஏற்பாடுகளை கோவில் அறக்கட்டளை தலைவரான, கவுன்சிலர் ராம்குமார் செய்திருந்தார்.