ADDED : அக் 26, 2025 10:41 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: நாட்டார்மங்கலத்தில் காங்., சார்பில் ஓட்டு திருட்டை கண்டித்து கையெழுத்து இயக்கம் நடந்தது.
விழுப்புரம் வடக்கு மாவட்ட காங். ஓ.பி.சி., அணி சார்பில் நாட்டார்மங்கலம் கூட்ரோடு மற்றும் தீவனுாரில் நடந்த கையெழுத்து இயக்கத்திற்கு, ஓ.பி.சி. மாவட்ட தலைவர் கோவிந்தன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் ரங்கபூபதி கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்து பேசினார்.
மாநில பொதுச் செயலாளர் மணி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மனோகரன், கலைச்செல்வன், வழக்கறிஞர்கள் சிவா, தினகரன் நிர்வாகிகள் சண்முகம், மதன்குமார், சீதாராமன், சதீஷ்குமார், ரவிச்சந்திரன், கிருஷ்ணன் பங்கேற்றனர். பாலு நன்றி கூறினார்.

