ADDED : அக் 19, 2025 02:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: கூலித் தொழிலாளி மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
திண்டிவனம் கிடங்கல் 1 பகுதியைச் சேர்ந்தவர் சாதிக் பாஷா, 42; கூலித் தொழிலாளி. குடிபழக்கமுடைய இவர், வேலைக்கு செல்லும் பணத்தை வீட்டு செலவிற்கு கொடுக்காமல் இருந்து வந்துள்ளார்.
இதனை கடந்த 13ம் தேதி அவரது மனைவி ஷபானா கண்டித்துள்ளார். இதனால் கோபித்துக்கொண்டு வெளியில் சென்ற சாதிக் பாஷா மீண்டும் திரும்பிவரவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.