sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தாலுகா ஆபீசில் தீக்குளித்தவர் சாவு

/

தாலுகா ஆபீசில் தீக்குளித்தவர் சாவு

தாலுகா ஆபீசில் தீக்குளித்தவர் சாவு

தாலுகா ஆபீசில் தீக்குளித்தவர் சாவு


ADDED : செப் 29, 2024 06:09 AM

Google News

ADDED : செப் 29, 2024 06:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை : மேல்மலையனுார் தாலுகா அலுவலகத்தில் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அடுத்த கெங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வரதன் மகன் மோகன்ராஜ், 33; இவர், நேற்று முன்தினம் மதியம் 1:00 மணியளவில், தாலுகா அலுவலகத்தில் தனது நிலத்தை 23 பேர் அபகரிக்க முயல்வதாக கூறி உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

உடன் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் சென்னை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று காலை 11:00 மணியளவில் இறந்தார். வளத்தி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மோகன்ராஜ் இறப்புக்கு காரணமான 23 பேர் மீது வழக்குப் பதிந்து கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் நேற்று மாலை 5:00 மணிக்கு வளத்தி காவல் நிலையம் எதிரே சேத்பட் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, 5:15 மணிக்கு மறியலை கைவிடச் செய்தனர்.

காவல் நிலையத்தில் கிராம மக்கள், பா.ம.க., நிர்வாகிகள் அதிகளவில் திரண்டதால் பரபரப்பு நிலவியது.






      Dinamalar
      Follow us