/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவர் கைது
/
பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவர் கைது
ADDED : பிப் 15, 2024 11:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார் : பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சிறுமதுரையைச் சேர்ந்தவர் பழனி மனைவி சிவரஞ்சனி, 41; திருவெண்ணெய்நல்லுாரில் ேஹாட்டல் நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு 9:30 மணியளவில் மொபட்டில் வீட்டிற்கு சென்றார்.
சிறுமதுரை சாலையில் சென்ற போது, பின்னால் வந்த நபர் சிவரஞ்சனியை மறித்து தாக்கி தவறாக நடக்க முயன்றார்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரைப் பிடித்து திருவெண்ணெய்நல்லுார் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த நபர், பையூர் காலனியை சேர்ந்த முருகன் மகன் தினேஷ், 23; என தெரிந்தது. உடன் போலீசார் வழக்குப் பதிந்து தினேைஷ கைது செய்தனர்.