sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சாலைகளில் குப்பைகளை தீயிட்டு எரிக்கும் அவலம்! நகராட்சி துப்புரவு ஊழியர்கள் அடாவடி

/

சாலைகளில் குப்பைகளை தீயிட்டு எரிக்கும் அவலம்! நகராட்சி துப்புரவு ஊழியர்கள் அடாவடி

சாலைகளில் குப்பைகளை தீயிட்டு எரிக்கும் அவலம்! நகராட்சி துப்புரவு ஊழியர்கள் அடாவடி

சாலைகளில் குப்பைகளை தீயிட்டு எரிக்கும் அவலம்! நகராட்சி துப்புரவு ஊழியர்கள் அடாவடி


ADDED : பிப் 15, 2024 11:45 PM

Google News

ADDED : பிப் 15, 2024 11:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : திண்டிவனம் நகராட்சியில், குப்பைகள் கொட்டுவதற்கு இடம் இல்லாததால், நகராட்சி துப்புரவு ஊழியர்கள் பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டி தீ வைத்து எரித்து வரும் சம்பவம் அதிகரித்துள்ளது.

திண்டிவனம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது. குப்பை தொட்டி இல்லாத நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், தினந்தோறும் அனைத்து வார்டுகளிலிருந்து சேரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும், மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்க வேண்டும்.

இவ்வாறு பிரித்து வாங்கப்பட்ட குப்பைகள் அனைத்தும் வாகனங்கள் மூலம் நகராட்சிக்கு சொந்தமான சலவாதி சாலையில் உள்ள திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் அமைக்கப்படுள்ள யார்டுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தரம் பிரிக்கப்பட்டு வந்தது.

தற்போது இந்த இடத்தில் நகராட்சி பாதாள சாக்கடை திட்டத்திற்காக, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், நகராட்சியில் கடந்த ஒரு ஆண்டாக குப்பைகளைக் கொட்டி பிரிக்க இடம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனால், நகரப்பகுதியில் வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் குப்பைகள் அனைத்தும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்காமல் போடப்படுகிறது. நகராட்சி துாய்மைப் பணியாளர்கள் வாகனங்கள் மூலம் சேகரிக்கப்படும் குப்பைகளைக் கொட்டுவதற்கு போதுமான இடம் இல்லை.

இதன்காரணமாக திண்டிவனம் காவேரிப்பாக்கம் ஏரிக்கரை, சென்னை நெடுஞ்சாலையில் புதிய பஸ் நிலையம் கட்டும் இடத்திற்கு எதிரே உள்ள காலி இடம், கர்ணாவூர் பாட்டை, மயிலம் ரோடு, சந்தை மேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொட்டப்பட்டு நகராட்சி துப்புரவு பணியாளர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டு வருகிறது.

திண்டிவனம் நகரமன்ற கூட்டத்தில் அனைத்து கட்சி கவுன்சிலர்களும், நகராட்சியில் குப்பைகள் கொட்டுவதற்கு தனியாக இடம் ஒதுக்க வேண்டும் என பல முறை கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கு ஒவ்வொரு முறையும், நகராட்சி அதிகாரிகள் குப்பைகள் கொட்டுவதற்கு தனியாக இடம் தேடி வருவதாக கூறுகின்றனர். ஆனால், அதற்கான நடவடிக்கை எடுப்பதில்லை.

இதனால், நகராட்சி பகுதியில் தொடர்ந்து குப்பைகள் மலை போல் கொட்டப்பட்டு, நகராட்சி பணியாளர்கள் மூலம் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் தீ வைத்து எரிப்பதால் நகர பகுதியில் பல இடங்களில் புகை மண்டலமாக காணப்படுகிறது.

மெயின் ரோட்டில் வரும் புகையால் வாகன ஓட்டிகள் கண் எரிச்சல் ஏற்பட்டு விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் மூச்சுத் திணறால் பல்வேறு உடல் உபாதைகள், சுவாசக் கோளாறு ஏற்பட்டு பாதிப்பிற்குள்ளாகின்றனர்.

எனவே, பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, திண்டிவனம் நகராட்சி அதிகாரிகள், நகர பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை எரிப்பதை தடுத்து நிறுத்தி, தரம் பிரித்து உபயோகப்படுத்தும் வகையில் தனியாக இடம் தேர்வு செய்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us