/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வெடிகுண்டு வழக்கில் கைதானவர் குண்டர் சட்டத்தில் கைது
/
வெடிகுண்டு வழக்கில் கைதானவர் குண்டர் சட்டத்தில் கைது
வெடிகுண்டு வழக்கில் கைதானவர் குண்டர் சட்டத்தில் கைது
வெடிகுண்டு வழக்கில் கைதானவர் குண்டர் சட்டத்தில் கைது
ADDED : நவ 18, 2024 06:18 AM

விழுப்புரம், : விழுப்புரத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் கைதான வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம், திடீர்குப்பம் ஆண்டாள் நகரைச் சேர்ந்தவர் சேவியர்மணி மகன் துரைபாண்டி, 23; இவர், கடந்த அக்., 6ம் தேதி, அதே பகுதியை சேர்ந்த ஒருவரது வீட்டில், நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில், விழுப்புரம் டவுன் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தொடரும் இவரது குற்ற நடவடிக்கையை தடுக்கும் விதத்தில், குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., தீபக்சிவாச் பரிந்துரையின் பேரில், கலெக்டர் பழனி அதற்கான உத்தரவிட்டார்.
இதனையடுத்து, துரைபாண்டியை, விழுப்புரம் டவுன் போலீசார், நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.