/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பொதுமக்களை அச்சுறுத்தியவர் கைது
/
பொதுமக்களை அச்சுறுத்தியவர் கைது
ADDED : ஜன 18, 2024 04:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் பொது மக்களை அச்சுறுத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் வி.மருதூர் மேல்வன்னியர் தெருவை சேர்ந்த மணி மகன் வினோத்குமார்,31; இவர், கடந்த இரு தினங்களுக்கு முன்பு, விழுப்புரம் சித்தேரிக்கரை ரயில்வே கேட் அருகே உருட்டுகட்டையை வைத்துக்கொண்டு, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மிரட்டியுள்ளார்.
தகவலறிந்த விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார், விரைந்து சென்று அவரை கைது செய்து, வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.