sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

செஞ்சி கமலக்கண்ணியம்மன் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

/

செஞ்சி கமலக்கண்ணியம்மன் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

செஞ்சி கமலக்கண்ணியம்மன் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

செஞ்சி கமலக்கண்ணியம்மன் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது


ADDED : மே 06, 2025 05:14 AM

Google News

ADDED : மே 06, 2025 05:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: செஞ்சி கோட்டை கமலக்கண்ணியம்மன் கோவில் தேர் திருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது.

செஞ்சி ராஜகிரி கோட்டையில் உள்ள கமலக்கண்ணியம்மன் கோவில் பாரம்பரிய தேர் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதை முன்னிட்டு நேற்று காலை கமலக்கண்ணியம்மன், ராஜகாளியம்மன், பீரங்கிமேடு மகா மாரியம்மன், கோட்டை வீரப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார வழிபாடு நடந்தது.

காலை 9:00 மணிக்கு மகா மாரியம்மன் கோவிலில் சிறப்பு யாகம், கொடி மரத்திற்கு கலசாபிஷேகமும் செய்தனர். 10:00 மணிக்கு கொடியேற்றமும், மகா தீபாராதனை நடந்தது.

இதில் கமலக்கண்ணியம்மன் கோவில் அறங்காவலர் அரங்க ஏழுமலை, ஒன்றிய சேர்மன் விஜயகுமார் மற்றும் உபயதாரர்கள், விழா குழுவினர் கலந்து கொண்டனர்.

விழா நாட்களில் அனைத்து கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், இரவு சாமி வீதி உலா, வாண வேடிக்கை, மேடை நாடகம், இன்னிசை கச்சேரி, தெருகூத்து நடக்க உள்ளது. இம்மாதம் 13ம் தேதி காலை 6:00 மணிக்கு பால் குடம் ஊர்வலம், மதியம் 12:00 மணிக்கு சாகை வார்த்தலும், மாலை 2.30 மணிக்கு திருத்தேர் திருவிழா நடக்க உள்ளது.

அனுமதி இலவசம்

கமலக்கண்ணியம்மன் செஞ்சி கோட்டை ராஜகிரி கோட்டையில் பாதி அளவு மலையில் உள்ளது. பல நுாற்றாண்டு பாரம்பரிய விழா என்பதால் ஆங்கிலேயர் ஆட்சியின் போதே விழா நாட்களில் பொது மக்கள் ராஜகிரி கோட்டைக்குள் சென்று வர இலவச அனுமதி வழங்கி வந்தனர். இதே போல் இந்த ஆண்டும் நேற்று முதல் விழா முடியும் 14ம் தேதி வரை பொது மக்கள் ராஜகிரி கோட்டைக்குள் சென்று வர இந்திய தொல்லியல் துறையினர் இலவச அனுமதி வழங்கி உள்ளனர்.








      Dinamalar
      Follow us