ADDED : ஜன 30, 2024 06:49 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே நெல் மூட்டைகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததில் டிரைவர் இறந்தார்.
கரூர் மாவட்டம், கல்லடையைச் சேர்ந்தவர் ஆரோக்கியம் மகன் பாக்கியராஜ், 37; லாரி டிரைவர். இவர் நேற்று திருச்சி அடுத்த மணப்பாறையில் இருந்து லாரியில் நெல் மூட்டைகள் ஏற்றிக் கொண்டு ஆரணிக்கு புறப்பட்டார்.
மாலை 4:45 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் முட்டத்துார் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவே கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் பாக்கியராஜ் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
செஞ்சி டி.எஸ்.பி., கவீனா, கஞ்சனுார் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் , பாக்கியராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின், லாரியை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.
விபத்து குறித்து கஞ்சனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.