ADDED : மார் 19, 2024 10:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மரக்காணம், : மரக்காணம் அடுத்த பனிச்சமேடு பஸ் நிறுத்தம் அருகே அடையாளம் தெரியாத ஆண் நபர் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் இ.சி.ஆரில், மரக்காணம் அடுத்த பனிச்சமேடு பஸ் நிறுத்தம் அருகே நேற்று மாலை 4:00 மணிக்கு 40 வயது மதிக்கதக்க ஆண் நபர் இறந்து கிடந்தார். இது குறித்து அப்பகுதி மக்கள் மரக்காணம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த மரக்காணம் போலீசார் உடலைக் கைப்பற்றி, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

