நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே காணாமல் போன இளம் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் அருகே சிறுவாக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்தானம் மகள் சசிகலா, 23; இவர், பி.ஏ., படித்துவிட்டு, வீட்டில் இருந்து வந்தார். கடந்த 8ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற சசிகலா, மீண்டும் திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், பெற்றோர் போலீசில் புகாரளித்தனர். காணை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.