நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் அடுத்த கொடிமா கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் மனைவி லாவண்யா, 23; இவர்களுக்கு 4 வயதில் மகன் உள்ளார். கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக, எம்.குச்சிப்பாளையத்தில் உள்ள தனது தந்தை அண்ணாமலை வீட்டில் கடந்த 2 மாதங்களாக லாவண்யா வசித்து வந்தார். கடந்த 9ம் தேதி வீட்டிலிருந்த லாவண்யா மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
அண்ணாமலை அளித்த புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.