நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அடுத்த திருமூண்டீச்சரம் கிராமத்தில் பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு பூஜை செய்து விட்டு நிர்வா கத்தினர் பூட்டி சென்றனர்.
நேற்று காலை வந்து பார்த்த போது, கதவு உடைக் கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உள்ளே சென்று பார்த்த போது, பித்தளை பொருட்கள் திருடு போனது தெரிந்தது. திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.