ADDED : மே 11, 2025 11:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் மருத்துவமனை மெடிக்கல் பூட்டை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
விழுப்புரம் கணபதி நகரை சேர்ந்தவர் வெங்கட் சுப்ரமணிய செல்வம், 55; விழுப்புரம் நேருஜி சாலையில் உள்ள பிரபல மருத்துவமனை மெடிக்கலில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவர், கடந்த 9ம் தேதி இரவு மெடிக்கலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். பின், மறுநாள் காலை வந்து பார்த்தபோது, மெடிக்கல் பூட்டை உடைத்து 10 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது.
விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.