/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மயிலம் முருகன் கோவிலில் திருவிளக்குபூஜை
/
மயிலம் முருகன் கோவிலில் திருவிளக்குபூஜை
ADDED : ஜன 27, 2026 04:23 AM

மயிலம்: மயிலம் முருகன் கோவில்திருப்படிவிழாவில்திருவிளக்குபூஜைநடந்தது.
அதனையொட்டி நேற்று காலை5:30 மணிக்கு மலையடிவாரத்தில் உள்ள அக்னி குளக்கரையில் சுந்தர விநாயகர் கோவிலில் நடந்த வழிபாட்டிற்கு பின்திருப்படிவிழாக்குழுவினர் மலைக்கோவிலுக்கு காவடிகளுடன் வந்தனர்.
விழாவில் மேலமங்கலம் ராமதாஸ் சுவாமிகள் ஆன்மிக சொற்பொழிவாற்றினார்.
புலவர் விஜயன் அறிமுக உரையாற்றினார்.படி விழாகுழு செயலாளர் வழக்கறிஞர் நீலமேக வண்ணன், ஆசிரியர் கண்ணன், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சண்முகம், தமிழ் ஆசிரியர் விஜயன், இராமசிவகுமார் சொற்பொழிவாற்றினார்கள்.
பின், கோவில் மண்டபத்தில் உலக அமைதிக்காக 501 பெண்கள்திருவிளக்குவழிபாடு செய்தனர்.
காலை 11:00 மணிக்கு மூலவருக்கு மகா தீபாராதனை, வழிபாட்டிற்கு பின்னர் பகல் 12:00 மூலவர் தங்கக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இரவு 9:00 மணிக்கு உற்சவர் கிரிவலம் நடந்தது.திருப்படிவிழா ஏற்பாடுகளைமயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், கல்லுாரி செயலாளர் ராஜிவ்குமார் ராஜேந்திரன் மற்றும் விழா குழுவினர்செய்திருந்தனர்.

