sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பக்கிங்காம் கால்வாயில் மூழ்கிய சகோதரர்கள் மூவரும் பலி

/

பக்கிங்காம் கால்வாயில் மூழ்கிய சகோதரர்கள் மூவரும் பலி

பக்கிங்காம் கால்வாயில் மூழ்கிய சகோதரர்கள் மூவரும் பலி

பக்கிங்காம் கால்வாயில் மூழ்கிய சகோதரர்கள் மூவரும் பலி


ADDED : டிச 24, 2024 08:10 AM

Google News

ADDED : டிச 24, 2024 08:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்காணம் : மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் மீன் பிடித்தபோது வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சகோதரர்கள் மூவரும், நேற்று சடலமாக மீட்கப்பட்டனர்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், சந்தைதோப்பு பகுதியை சேர்ந்த கணேசன் மகன்கள் லோகேஷ், 26; இரட்டையர்களான விக்ரம்,24; சூர்யா,24. இவர்கள் மூவரும், நேற்று முன்தினம் மாலை, அதே பகுதியில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் மீன் பிடித்தனர். அப்போது, லோகேஷ் கால்வாயில் தவறிவிழுந்து, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். அண்ணனை காப்பாற்ற முயன்ற விக்ரம், சூர்யாவும் தண்ணீரில் அடித்து செல்லப் பட்டனர். தகவலறிந்த மரக்காணம் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார், மீனவர்கள் உதவியுடன் பக்கிங்காம் கால்வாயில், இரவு முழுவதும் படகில் சென்று தேடினர்.

இந்நிலையில் நேற்று காலை 7.00 மணிக்கு கால்வாய் ஓரமுள்ள புதரில் லோகேஷ் சடலத்தை மீட்டனர். அதே பகுதியில் மதியம் 2.50 மணிக்கு விக்ரம் உடல் கண்டெடுக்கப்பட்டது. மாலை 5.30 மணிக்கு மீனவர்கள் சுருக்குமடி வலை போட்டு தேடியதில் சூர்யாவின் உடல் சிக்கியது. மூவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மரக்காணம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

காரணம்

இப்பகுதியில் புதியதாக கட்டிய தடுப்பணையில் இரு ஷட்டர்களை நீக்கியதால், அந்த வழியாக தண்ணீர் அதிகளவு வெளியேறி, பக்கிங்காம் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தடுப்பணையிலிருந்து சற்று துாரத்தில், புதிய பாலம் கட்டும் இடத்தில் மண் கொட்டி தண்ணீர் செல்லும் வழியை அடைத்துள்ளனர். இதனால் சிறிய அளவு இருந்த வழியில் தண்ணீர் வேகமெடுத்து சென்றதால் மூவரும் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளனர்.








      Dinamalar
      Follow us