sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

செவிலியருக்கு மூன்று நாள் கர்ப்பகால பயிற்சி முகாம்

/

செவிலியருக்கு மூன்று நாள் கர்ப்பகால பயிற்சி முகாம்

செவிலியருக்கு மூன்று நாள் கர்ப்பகால பயிற்சி முகாம்

செவிலியருக்கு மூன்று நாள் கர்ப்பகால பயிற்சி முகாம்


ADDED : ஜன 05, 2024 10:14 PM

Google News

ADDED : ஜன 05, 2024 10:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : ஸ்ரீரங்கபூபதி நர்சிங் கல்லுாரியில் கிராம சுகாதார செவிலியர்களுக்கு மூன்று நாள் கர்ப்பகால பயிற்சி முகாம் நடந்தது.

செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி நர்சிங் கல்லூரியில் சத்தியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கிராம சுகாதார செவிலியர்களுக்கு கர்ப்பகால பராமரிப்பு குறித்த மூன்று நாள் பயிற்சி முகாம் நடந்தது.

உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலுடன் புதுடில்லியை சேர்ந்த ஜபைக்கோ அமைப்பினர் செவிலியர்களுக்கு பயிற்சியளித்தனர்.

இப்பயிற்சி முகாமிற்கு தாய், சேய் நல அலுவலர் அம்பிகா தலைமை தாங்கினார். சத்தியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் யோகாபிரியா முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் மேனகா காந்தி வரவேற்றார்.

கல்லூரி தாளாளர் ரங்கபூபதி முகாமை துவக்கி வைத்து, செவிலியர்களுக்கு பயிற்சி கையேடு வழங்கினார். ஜபைக்கோ கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு ஆராய்ச்சி அதிகாரி லிடியா, திட்ட அலுவலர்கள் சைலேஷ், சுபா வைஷ்ணவி ஆகியோர் செவிலியர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

இதில் சத்தியமங்கலம், ஒட்டம்பட்டு, அனந்தபுரம் ஆரம்பசுகாதார நிலைய பகுதி கிராம சுகாதார செவிலியர்கள் பயிற்சி பெற்றனர். சுகாதார ஆய்வாளர் ஏழுமலை நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us