/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மூன்று நம்பர் லாட்டரி: 3 பேர் கைது
/
மூன்று நம்பர் லாட்டரி: 3 பேர் கைது
ADDED : ஜூன் 07, 2025 02:05 AM

வானுார் : வானுார் அருகே மூன்று நம்பர் லாட்டரி விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வானுார் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் அர சால் தடை செய்யப்பட்ட மூன்று நம்பர் லாட்டரி விற்பனை நடப்பதாக போலீசாருக்கு புகார் சென்றது.
வானுார் போலீசார் ஆகாசம்பட்டு பகுதியில் நேற்று ரோந்து சென்றபோது, மொபைல்போன் மூலமாக 3 நம்பர் லாட்டரி விற்பனை செய்த மூவரை மடக்கி பிடித்தனர்.
வானுார் அடுத்த பாப்பாஞ்சாவடி புது காலனி ராசு மகன் கோவிந் தன், 37; விநாயக புரம் அருணாசலம் மகன் சுரேஷ் தர்மா, 32; புதுச்சேரி தொண்டமாநத்தம் காத்தவராயன் மகன் பார்த்த சாரதி, 37; என்பது தெரியவந்தது.
மூவரையும் போலீசார் கைது செய்து, லாட்டரி விற்பனைக்கு பயன்படுத்திய மொபைல்போனை பறிமுதல் செய்தனர்.