sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மூன்று கடைகளை உடைத்து பணம் கொள்ளை:போலீசார் விசாரணை

/

மூன்று கடைகளை உடைத்து பணம் கொள்ளை:போலீசார் விசாரணை

மூன்று கடைகளை உடைத்து பணம் கொள்ளை:போலீசார் விசாரணை

மூன்று கடைகளை உடைத்து பணம் கொள்ளை:போலீசார் விசாரணை


ADDED : ஜன 10, 2025 06:56 AM

Google News

ADDED : ஜன 10, 2025 06:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே மூன்று கடைகளை உடைத்து திருடு போன சம்பவம் கருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த மடப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் அரவிந்த், 33; நகை அடகு கடை வைத்துள்ளார். துலுக்கப் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் யாசகம் மகன் கிருஷ்ணமூர்த்தி, 32; விவசாய பண்ணை சர்வீஸ் கடை வைத்துள்ளார். கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 52;

இவர்கள் மூன்று பேரும் மனக்குப்பம் கூட்ரோடு பகுதியில் கடை நடத்தி வருகின்றனர். இவர்கள் வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு கடையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். பின் நேற்று காலை கடையை திறப்பதற்காக சென்றபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது கடையில் வைத்திருந்த பணம் திருடு போனது தெரியவந்தது.

தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லுார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை விசாரணை மேற்கொண்டதில் மூன்று கடைகளிலும் மொத்தம் 18 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரிய வந்தது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us