நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் வரலாற்று ஆய்வு மையத்தின் சார்பில், உலக மரபு வாரத்தை முன்னிட்டு, உழவார பணி நடந்தது.
விழுப்புரம் வரலாற்று ஆய்வு மையத்தின் சார்பில், உலக மரபு வாரத்தை முன்னிட்டு, கண்டாச்சிபுரம் பகுதியில் வரலாற்று தொன்மை மிக்க பாறை ஓவியங்கள் உள்ள இடங்களில் உழவார பணி மேற்கொண்டனர்.
விழுப்புரம் அரசு கல்லுாரி பேராசிரியர் ரமேஷ் தலைமையில், விழுப்புரம் அரசு கலை கல்லுாரி முனைவர் பட்ட ஆய்வாளர்கள், கல்லுாரி மாணவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தொல்லியல் ஆர்வலர்கள் பலர் தொல்லியல் தொன்மை இடங்களை துாய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

