/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனம் போலீஸ் நிலையம் முற்றுகை
/
திண்டிவனம் போலீஸ் நிலையம் முற்றுகை
ADDED : செப் 01, 2025 06:59 AM
திண்டிவனம் : திண்டிவனம் அருகே கிடங்கல் கோட்டை மேடு பகுதியை சேர்ந்த பக்தவச்சலம் மகன் விஜய், 25; இவர், நண்பர்கள் அருண், மனோகர் ஆகியோருடன் கடந்த 27 ம் தேதி, இரவு பூதேரியில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு சென்றார்.
அங்கு, அதே பகுதியை சேர்ந்த சத்தீஷ், சந்தோஷ், கிேஷார், ஜெகதீஷ் ஆகியோர் போதையில், விஜய் மற்றும் அவரது நண்பர்களுடன் தகராறில் ஈடுபட்டனர். மேலும், அன்றைய தினம் இரவு 12:30 மணியளவில் விஜய் வீட்டிற்கு வந்து, அவரை தாக்கினர். உடன் இருந்த மனோகர், அருணையும் தாக்கினர்.
இதுகுறித்து கடந்த 28 ம் தேதி, திண்டிவனம் டவுன் போலீசில் விஜய் புகார் அளித்தார்.
இந்நிலையில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்ய வலியுறுத்தி நேற்று காலை, 11:45 மணியளவில், திண்டிவனம் டவுன் போலீஸ் நிலையத்தை விஜய் மற்றும் கோட்டை மேடு பகுதியை சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததால் கலைந்து சென்றனர்.