/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கிண்டி காலணி தயாரிப்பு நிறுவனத்தில் பயிற்சி; விழுப்புரத்தில் 18, 19 தேதிகளில் விண்ணப்பிக்க அறிவிப்பு
/
கிண்டி காலணி தயாரிப்பு நிறுவனத்தில் பயிற்சி; விழுப்புரத்தில் 18, 19 தேதிகளில் விண்ணப்பிக்க அறிவிப்பு
கிண்டி காலணி தயாரிப்பு நிறுவனத்தில் பயிற்சி; விழுப்புரத்தில் 18, 19 தேதிகளில் விண்ணப்பிக்க அறிவிப்பு
கிண்டி காலணி தயாரிப்பு நிறுவனத்தில் பயிற்சி; விழுப்புரத்தில் 18, 19 தேதிகளில் விண்ணப்பிக்க அறிவிப்பு
ADDED : ஜூலை 15, 2025 10:45 PM
விழுப்புரம்; கிண்டியில் இயங்கும் மத்திய காலணி நிறுவனத்தில் தொழிற்கல்வி பயில வரும் 18 மற்றும் 19ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்தில் தொழிற்பூங்காவில் காலணி தொழிற்சாலை, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை மற்றும் அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம் வட்டத்தில் காலணி உற்பத்தி நிறுவனங்கள் விரைவில் செயல்பட உள்ளன.
இந்த நிறுவனங்களில், குறைந்தபட்சம் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த தொழிற்சாலைகளுக்கு, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பணியில் சேர, காலணி தயாரிப்பு தொடர்புடைய பாடப்பிரிவு படித்திருக்க வேண்டும்.
இதற்கான மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சென்னை கிண்டியில் செயல்படும், மத்திய காலணி நிறுவனத்தில் பயிற்சி முடித்திருக்க வேண்டும். இந்த பயிற்சி நிறுவனத்தில், 2025-2026 ம் ஆண்டு சேருவதற்கான தொழிற் கல்வி சேர்க்கை அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள், மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் தொழிற்கல்வி சேர்க்கைக்கு வரும் 18 மற்றும் 19 தேதிகளில் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு 9677943633, 9677943733 மற்றும் 9025997996 ஆகிய மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம்.