sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கல்லறை திருநாள் கிறிஸ்தவர்கள் அஞ்சலி

/

கல்லறை திருநாள் கிறிஸ்தவர்கள் அஞ்சலி

கல்லறை திருநாள் கிறிஸ்தவர்கள் அஞ்சலி

கல்லறை திருநாள் கிறிஸ்தவர்கள் அஞ்சலி


ADDED : நவ 03, 2024 04:11 AM

Google News

ADDED : நவ 03, 2024 04:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் :கல்லறை தினத்தையொட்டி, விழுப்புரத்தில் உள்ள கல்லறையில் கிறிஸ்தவர்கள் இறந்த முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

கிறிஸ்தவர்கள், இறந்தவர்களை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 2ம் தேதியை அனைத்து ஆன்மாக்கள் தினமாக கடைபிடிக்கின்றனர். இந்த நாள் கல்லறை திருநாள் என அழைக்கப்படுகிறது.

நேற்று நடந்த கல்லறை தினத்தையொட்டி, விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில் உள்ள கிறிஸ்து அரசர் கல்லறை தோட்டத்தில் காலை 6:00 மணிக்கு திரளான கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்களின் கல்லறையை மலர்களால் அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி ஜெபம் செய்தனர்.

இதேபோன்று, விக்கிரவாண்டி வெங்கடேஸ்வரா நகரில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கல்லறை, முண்டியம்பாக்கம், பனையபுரம், வீடூர் உள்ளிட்ட 10 கிராமங்களில் கல்லறை திருவிழா நடந்தது.

திண்டிவனத்தில் காலேஜ் ரோட்டில் உள்ள இ.எஸ்.ஐ., கல்லறைத் தோட்டத்திலும் கல்லறை திருநாள் நடந்தது.






      Dinamalar
      Follow us