ADDED : ஏப் 06, 2025 05:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : மத்திய அரசை கண்டித்து கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட த.வெ.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ரிஷிவந்தியத்தில் நடந்தது.
கிழக்கு மாவட்ட செயலாளர் பரணி பாலாஜி தலைமை தாங்கினார். இணைச் செயலாளர் மோகன், பொருளாளர் சுந்தரமூர்த்தி கண்டன உரையாற்றினர். லோக்சபாவில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற கோரி, மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை, ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

