/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கோல மாவு மண் மூட்டை விழுந்து இரண்டரை வயது குழந்தை பலி: திண்டிவனம் அருகே சோகம்
/
கோல மாவு மண் மூட்டை விழுந்து இரண்டரை வயது குழந்தை பலி: திண்டிவனம் அருகே சோகம்
கோல மாவு மண் மூட்டை விழுந்து இரண்டரை வயது குழந்தை பலி: திண்டிவனம் அருகே சோகம்
கோல மாவு மண் மூட்டை விழுந்து இரண்டரை வயது குழந்தை பலி: திண்டிவனம் அருகே சோகம்
ADDED : ஜூலை 03, 2025 11:47 AM
திண்டிவனம்: திண்டிவனம் அருகே கோலமாவு தயாரிக்க பயன்படுத்தப்படும் மண் மூட்டை சரிந்து விழுந்ததில், இரண்டரை வயது குழந்தை பரிதாபமாக பலியானது.
திண்டிவனம்-செஞ்சி சாலையில் உள்ள இருதயபுரம் பகுதியில் வசிப்பவர் சின்னப்பராஜ். இவரது மனைவி சினேகா. இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். சின்னப்பராஜ் நேற்று வெளியூர் சென்றுவிட்டார். சினேகா வீட்டின் உள்ளே இருந்தார்.
இந்நிலையில் வீட்டின் வெளியே உள்ள வராண்டாவில், இரண்டரை வயது ஆண் குழந்தை மேகராஜ், விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது கோலமாவு தயாரிப்பதற்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த மண் மூட்டை, குழந்தை மீது திடீரென்று சரிந்து விழுந்துவிட்டது.
குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு தாய் மற்றும் அருகில் உள்ளவர்கள் வந்து பார்த்த போது, மூட்டையின் அடியில் குழந்தை சிக்கியிருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து குழந்தையை மீட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே, குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து குழந்தையின் உடலை, உறவினர்கள் பிரேத பரிசோதனை செய்யாமல் வீட்டிற்கு கொண்டு செல்வதாக கூறி பிரச்னை செய்தனர். ரோஷனை போலீசார் மருத்துவனைக்கு விரைந்து சென்று உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து குழந்தையின் உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு நேற்று மாலை கொண்டு செல்லப்பட்டது. சம்பவம் குறித்து ரோஷணை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.