தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சகோதரனை தாக்கிய இருவர் கைது

சகோதரனை தாக்கிய இருவர் கைது

சகோதரனை தாக்கிய இருவர் கைது


ADDED : ஜூன் 06, 2025 06:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2025 06:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்; விழுப்புரம் அருகே வீட்டுமனை பிரச்னையில் சகோதரரை தாக்கிய, இருவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் அருகே அற்பிசம்பாளையத்தை சேர்ந்தவர் விநாயகம், 56; விவசாயி. இவர், தனது பூர்வீக வீட்டு மனை பகுதியில், வீடு கட்டுவதற்கான பணியை தொடங்கியுள்ளார்.

அண்ணன் தம்பிகளிடையே இட பிரச்னை இருந்ததால், கடந்த 2ம் தேதி அவரது சகோதரர்களான தணிகாசலம், 52; ஜெயச்சந்திரன், 60; ஆகியோர் வந்து, வீடு கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, இருவரும் விநாயகத்தை திட்டி, தாக்கியுள்ளனர்.

புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து, தணிகாசலம், ஜெயச்சந்திரனை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us