sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ரேஷன் அரிசி, காஸ் சிலிண்டர் பதுக்கிய இருவர் கைது

/

ரேஷன் அரிசி, காஸ் சிலிண்டர் பதுக்கிய இருவர் கைது

ரேஷன் அரிசி, காஸ் சிலிண்டர் பதுக்கிய இருவர் கைது

ரேஷன் அரிசி, காஸ் சிலிண்டர் பதுக்கிய இருவர் கைது


ADDED : டிச 24, 2024 07:59 AM

Google News

ADDED : டிச 24, 2024 07:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்; திண்டிவனத்தில் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனம், அவரப்பாக்கம் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்துள்ளதாக வந்த தகவலின் பேரில், டி.எஸ்.பி., அமிர்தவர்ஷினி தலைமையிலான, குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் நேற்று அவரப்பாக்கத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, சங்கர்,34; என்பவர் வீட்டில், 400 கிலோ ரேஷன் அரிசி, மறறும் 600 கிலோ ரேஷன் அரிசியில் உடைத்த நொய் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

பிடிபட்ட சங்கரை விசாரணை செய்ததில், பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்து விலைக்கு வாங்கி, கோழி, மாடுகளுக்கு தீவனமாக அரைத்து கூடுதல் விலைக்கு விற்பதற்காக பதுக்கியது தெரிய வந்தது.

விழுப்புரம் அடுத்த பனையபுரத்தில்வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்களை பதுக்கி ஓட்டல்களுக்கு விற்பதாக வந்த புகாரை தொடர்ந்து நடத்திய சோதனையில் பக்கிரிசாமி,62; என்பவர் வீட்டில் சோதனை செய்ததில், 23 வீட்டு உபயோக சிலிண்டர்கள் பதுக்கியிருந்ததை கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடம், வீட்டு உபயோக சிலிண்டரை வாங்கி, பதுக்கி வைத்து ஓட்டல்களுக்க கூடுதல் விலைக்கு விற்று வருவது தெரிய வந்தது.

இவ்விரு சம்பவங்கள் தொடர்பாக போலீசார் தனித்தனியே வழக்கு பதிந்து சங்கர் மற்றும் பக்கிரிசாமி ஆகியோரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us