ADDED : செப் 09, 2025 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம் அடுத்த நல்லாப்பாளையத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் பிரகாஷ், 45; இவர், வீட்டில் வெளிமாநில மதுபாட்டில் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்பேரில், இன்ஸ்பெக்டர் மூர்த்தி தலைமையிலான போலீசார் பிரகாஷ் வீட்டில் சோதனை செய்தனர்.
அங்கு பதுக்கி வைக்கபட்டிருந்த 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, பிரகாஷை கைது செய்தனர்.
இதேபோல், மலையரசன்குப்பம் சீனுவாசன் மனைவி தமிழரசி, 60; வீட்டிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, தமிழரசியை போலீசார் கைது செய்தனர்.