sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

முன்விரோதத்தில் தாக்குதல் ஆரோவில்லில் இருவர் கைது

/

முன்விரோதத்தில் தாக்குதல் ஆரோவில்லில் இருவர் கைது

முன்விரோதத்தில் தாக்குதல் ஆரோவில்லில் இருவர் கைது

முன்விரோதத்தில் தாக்குதல் ஆரோவில்லில் இருவர் கைது


ADDED : ஜூன் 01, 2025 11:12 PM

Google News

ADDED : ஜூன் 01, 2025 11:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: முன்விரோதத்தில் வாலிபரை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

வானுார் அடுத்த கோட்டக்கரை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் மோகன்ராஜ், 37; இவருக்கும், ஆலங்குப்பம் இந்திரா நகரை சேர்ந்த அய்யனார் மகன் ராஜ்குமார், 37; என்பவருக்கும், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தி.மு.க., பா.ம.க., கட்சி தொடர்பாக வாட்ஸ் அப் குழுவில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் இருந்து இருவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டு பேசாமல் இருந்தனர்.

இந்நிலையில் கடந்த 30ம், தேதி கோட்டக்கரையில் நின்றிருந்த மோகன்ராஜ் உடன், அங்கு வந்த ராஜ்குமார், அவரது நண்பர் நாவப்பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் கிருபாநந்தன், 23; ஆகியோருக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த இருவரும் மோகன்ராஜை ஆபாசமாக திட்டி, கூர்மையான ஆயுதத்தால் தாக்கி மிரட்டல் விடுத்து சென்றனர்.

மோகன்ராஜ் அளித்த புகாரின்பேரில், ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து, ராஜ்குமார், கிருபாநந்தன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us