sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பைனான்சியர் கடத்தல் வழக்கு மதுரையில் இருவர் கைது

/

பைனான்சியர் கடத்தல் வழக்கு மதுரையில் இருவர் கைது

பைனான்சியர் கடத்தல் வழக்கு மதுரையில் இருவர் கைது

பைனான்சியர் கடத்தல் வழக்கு மதுரையில் இருவர் கைது


ADDED : அக் 30, 2025 03:21 AM

Google News

ADDED : அக் 30, 2025 03:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: பைனான்சியரை காரில் கடத்திய வழக்கில், மதுரையில் பதுங்கியிருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அருகே வளத்தியை சேர்ந்தவர் சிவா, 40; பைனான்சியர். இவரை, நேற்று முன்தினம், 7 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி சென்றதோடு, 4 லட்சம் ரூபாய் மற்றும் பாஸ்போர்ட், வாட்சுகள் உள்ளிட்ட பொருட்களை பறித்து சென்றது.

தகவலறிந்த விழுப்புரம் மாவட்ட போலீசார், மாவட்டம் முழுதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டதால், சுதாரித்துக்கொண்ட கடத்தல் கும்பல், சிவா மற்றும் அவரின் காரை விட்டு, தப்பி சென்றது.

போலீசார் சிவாவை மீட்டதோடு, இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை தேடினர்.

இந்நிலையில், சம்பவத்தில் தொடர்புடைய விருதுநகர் மாவட்டம், அயன்சல்வார்பட்டை சேர்ந்த கணேசமூர்த்தி, 28; திருத்தங்கல் கிராமத்தை சேர்ந்த வைரமுத்து, 21; ஆகியோர், மதுரையில் தனியார் விடுதியில் பதுங்கியிருந்தது தெரிந்தது, இருவரையும் கைது செய்து விழுப்புரம் அழைத்து வந்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள கடத்தல் கும்பபலை தீவிரமாக தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us