sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மாநாட்டிற்கு சென்றபோது தகராறு பா.ம.க.,வினர் 2 பேர் கைது

/

மாநாட்டிற்கு சென்றபோது தகராறு பா.ம.க.,வினர் 2 பேர் கைது

மாநாட்டிற்கு சென்றபோது தகராறு பா.ம.க.,வினர் 2 பேர் கைது

மாநாட்டிற்கு சென்றபோது தகராறு பா.ம.க.,வினர் 2 பேர் கைது


ADDED : மே 14, 2025 01:09 AM

Google News

ADDED : மே 14, 2025 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : திண்டிவனத்தில், மாநாட்டிற்கு சென்றபோது போலீசாரிடம் தகராறு செய்த வழக்கில் பா.ம.க., வினர் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனம் அடுத்த மேல்பேட்டை அருகே, நேற்று முன்தினம் மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் நடந்த பா.ம.க., சித்திரை முழு நிலவு மாநாடு நடந்தது.

மாநாட்டிற்கு, வேனில் வந்த அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த தொண்டர்கள் வேனின் மீது ஏறி ஆடியபடி சென்றனர். இதனால், வேனை நிறுத்திய டிரைவர், அவர்களை கீழே இறங்கும்படி கூறினார்.

கீழே இறங்கிய அவர்கள், தேசிய நெடுஞ்சாலையை மறித்து ஆட்டம் போட்டனர்.

அப்போது, அங்கு ரோந்து வந்த திண்டிவனம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருபாலட்சுமி மற்றும் அவரது டிரைவர் காவலர் சவுந்தரராஜன் உள்ளிட்ட போலீசார், சாலையில் ஆடியவர்களை கலைந்து போகும்படி கூறியதால், வாக்குவாதத்தில் ஈடுபட்டு காவலர் சவுந்தரராஜனை நெட்டித் தள்ளியுள்ளனர். பின், அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவலர் சவுந்தர்ரராஜன், ரோஷணை போலீசில் அளித்த புகாரின் பேரில், பா.ம.க., வினர் 4 பேர் மீது, வழக்குப் பதிந்து ஜெயங்கொண்டம் அடுத்த கழுவந்தோண்டி பகுதியைச் சேர்ந்த கனகசபை மகன் வெங்கடேசன், 35; மணிமொழி மகன் ராஜா, 29; ஆகிய இருவரை நேற்று கைது செய்து, திண்டிவனம் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us