ADDED : ஜன 09, 2024 06:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் பஸ் நிலையத்தில் அடையாளம் தெரியாத முதியவர் இறந்து கிடந்தார்.
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில், கடந்த 31ம் தேதி மாலை கள்ளக்குறிச்சி பஸ் நிறுத்தம் பகுதியில் 80 வயது மதிக்கத் தக்க ஆண் நபர் இறந்து கிடந்தார். பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், விழுப்புரம் வள்ளல்பாரி போலீசில் புகார் அளித்தார்.
தாலுகா போலீசார் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த நபர், பஸ் நிலையத்தில் ஆதரவின்றி திரிந்ததும், கடந்த சில தினங்களாக உடல்நலம் குன்றிய அவர் இறந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.