ADDED : ஜன 15, 2024 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை : மேல்மலையனுார் அருகே அடையாளம் தெரியாத முதியவர் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேல்மலையனுார் அடுத்த தாயனுார் கிராமத்தில் உள்ள நிலத்தில் நேற்று 75 வயது முதியவர் இறந்து கிடந்தார். அவர் யார் என்ற விபரம் தெரியவில்லை.
இது குறித்து வி.ஏ.ஓ., சரவணனின் அளித்த புகாரின் பேரில், அவலுார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.