ADDED : ஆக 22, 2025 10:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் அருகே, இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கோனுார், சண்முகம் என்பவரின் நிலத்தில், அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார்.
தகவலறிந்த காணை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவர் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காணை போலீசார் வழக்குப் பதிந்து, இறந்தவர் யார் என விசாரிக்கின்றனர்.