நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை : மேல்மலையனுாரில் ஒன்றிய கூட்டம் நடந்தது.
ஒன்றிய மன்ற கூடத்தில் நடந்த கூட்டத்திற்கு, சேர்மன் கண்மணி தலைமை தாங்கினார். பி.டி.ஓ., சிவசண்முகம் வரவேற்றார்.
மாதாந்திர வரவு, செலவு கணக்குகள் பார்வைக்கு வைக்கப்பட்டது. 75வது அரசியலமைப்பு சட்ட தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்றனர்.
கூட்டத்தில், துணை சேர்மன் விஜயலட்சுமி முருகன், மாவட்ட கவுன்சிலர்கள் சாந்தி, செல்வி ராமசரவணன், ஒன்றிய கவுன்சிலர்கள் நெடுஞ்செழியன், கலா, ஷாகினர்ஷத், துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.