ADDED : மே 14, 2025 12:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை : மேல்மலையனுாரில் ஒன்றிய கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, ஒன்றிய சேர்மன் கண்மணி தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் ஜெயசங்கர், சீதாலட்சுமி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மாதாந்திர வரவு, செலவு கணக்குகள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
துணைச் சேர்மன் விஜயலட்சுமி முருகன், ஒன்றிய கவுன்சிலர்கள் நெடுஞ்செழியன், கலா, ரவிச்சந்திரன், முரளி துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.