/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கிருஷ்ணர் கோவிலில் உறியடி திருவிழா
/
கிருஷ்ணர் கோவிலில் உறியடி திருவிழா
ADDED : செப் 23, 2024 04:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி வேணுகோபால சுவாமி கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு உறியடி திருவிழா நடந்தது.
அதனையொட்டி, சுவாமிக்கு நேற்று முன்தினம் காலை சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. மாலையில் நடந்த உறியடி திருவிழாவை முன்னாள் நகர மன்ற தலைவர் ஜனகராஜ் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். இளைஞர்கள் ஆர்வமுடன் உறியடி திருவிழாவில் பங்கேற்றனர். சுவாமி மாடவீதி வழியாக ஊர்வலம் நடந்தது. கிராம மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை யாதவ சமூக முக்கியஸ்தர்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.