sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது

/

ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது

ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது

ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது


ADDED : அக் 10, 2025 03:52 AM

Google News

ADDED : அக் 10, 2025 03:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: பட்டா பெயர் மாற்றம் செய்ய, ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.,வை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த வரிக்கல் கிராமத்தை சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன், 33; இவர், தனது தாத்தா தானமாக கொடுத்த நிலத்தை, தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்து தர, கடந்த செப்., 26ம் தேதி செஞ்சி தாசில்தார் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

இந்த மனு வரிக்கல், மேல்அருங்குணம் பகுதி வி.ஏ.ஓ., தேவராஜ், 45; என்பவரிடம் விசாரணைக்கு வந்தது. அவர், பட்டா பெயர் மாற்றம் செய்ய கோகுலகிருஷ்ணனிடம், 20,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து கோகுலகிருஷ்ணன் நேற்று காலை விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

போலீசாரின் ஆலோசனை படி நேற்று பகல் 12:20 மணியளவில் வரிக்கல் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் இருந்த தேவராஜிடம், கோகுலகிருஷ்ணன் ரூ.10,000 ஆயிரம் கொடுத்தார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., அழகேசன், இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி மற்றும் போலீசார் தேவராஜை கையும் களவுமாக கைது செய்தனர். தொடர்ந்து, அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us