sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தி.மு.க., கவுன்சிலரை கைது செய்ய வலியுறுத்தி வி.ஏ.ஓ.,க்கள் போராட்டம்

/

தி.மு.க., கவுன்சிலரை கைது செய்ய வலியுறுத்தி வி.ஏ.ஓ.,க்கள் போராட்டம்

தி.மு.க., கவுன்சிலரை கைது செய்ய வலியுறுத்தி வி.ஏ.ஓ.,க்கள் போராட்டம்

தி.மு.க., கவுன்சிலரை கைது செய்ய வலியுறுத்தி வி.ஏ.ஓ.,க்கள் போராட்டம்

2


ADDED : ஏப் 30, 2025 07:37 AM

Google News

ADDED : ஏப் 30, 2025 07:37 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்; திண்டிவனத்தில் வி.ஏ.ஓ.,வை தாக்கிய தி.மு.க., கவுன்சிலரை கைது செய்யக்கோரி, வி.ஏ.ஓ.,க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சி 28வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சந்திரன். இவர், தனது வார்டை சேர்ந்த பெண் ஒருவருக்கு திருமண சான்றிதழ் பெற, திண்டிவனம் நகர வி.ஏ.ஓ., சிற்றரசுவிடம் பேசினார். நேற்று காலை 10:00 மணிக்கு தனது அலுவலகத்திற்கு வருமாறு வி.ஏ.ஓ., கூறியதால், கவுன்சிலர் சந்திரன் சென்றார்.

ஆனால் அலுவலகத்தில் வி.ஏ.ஓ., இல்லை. 12:00 மணிக்கு வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கவுன்சிலர் கேட்டபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, கவுன்சிலர் சந்திரன் ஆதரவாளர்கள் சிலர் வி.ஏ.ஓ., சிற்றரசுவை தாக்கியதாக கூறப்படுகிறது. காயமடைந்த அவர், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, இதுகுறித்து டவுன் போலீசில் வி.ஏ.ஓ., புகார் அளித்தார். இதனிடையே, வி.ஏ.ஓ., தன்னை திட்டியதாக, கவுன்சிலர் சந்திரன் டவுன் போலீசில் புகார் அளித்தார்.

இந்நிலையில், நேற்று மாலை 5:45 மணிக்கு, வி.ஏ.ஓ., சிற்றரசுவை தாக்கிய கவுன்சிலரை கைது செய்ய வலியுறுத்தி, தாலுகா அலுவலகம் முன்பு, கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் செல்வம், சுதாகர், ராம்குமார் உள்ளிட்ட 50க்கு மேற்பட்ட வி.ஏ.ஓ.,க்கள் திடீர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

டவுன் சப் இன்ஸ்பெக்டர் செல்வதுரை பேச்சுவார்த்தை நடத்தினார். கவுன்சிலர் சந்திரன் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்ய வேண்டும், அதுவரை போராட்டம் தொடரும் என்று கூறி நேற்று இரவு 8:00 மணி வரை போராட்டம் நடத்தினர்.

இதைத் தொடர்ந்து, கவுன்சிலர் சந்திரன் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, சஞ்சிவராயன்பேட்டை மணிகண்டன், கார்த்தி ஆகிய இருவரை கைது செய்தனர். அதன்பிறகு, வி.ஏ.ஓ.க்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us