ADDED : ஜூலை 28, 2025 10:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டாச்சிபுரம்; கண்டாச்சிபுரத்தில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் விடுதலைச்செல்வன் தலைமை தாங்கினார். பொருளாளர் இளங்கோவன், அமைப்பாளர் ரமேஷ், தொகுதி துணைச் செயலாளர் பகலவன் முன்னிலை வகித்தனர். முகையூர் ஒன்றிய செயலாளர் முருகன் வரவே ற்றார்.
பொதுச் செயலாளர் ரவிக்குமார் மத்திய அரசின் செயல்பாடுகளை கண்டித்தும், கட்சியின் தீர்மானங்களை விளக்கியும் பேசினார். தேர்தல் பணிக்குழு பொருப்பாளர் குணவழகன், மாநில முதன்மைச் செயலாளர்பாவணன், இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் சவுரிராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஒன்றிய பொருளாளர் பெருமாள் நன்றி கூறினார்.
முகையூர், கண்டாச்சிபுரம், புதுப்பாளையம், வீரங்கிபுரம், செங்கமேடு உள்ளிட்ட பகுதிகளில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.