/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கால்நடைத் துறை தடுப்பூசி முகாம்
/
கால்நடைத் துறை தடுப்பூசி முகாம்
ADDED : செப் 19, 2024 11:19 PM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், கால்நடை நோய் தடுப்பூசி முகாம் 28 நாட்கள் நடைபெற உள்ளது.
கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:
தேசிய கால்நடைகள் நோய் கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ், 4வது சுற்று கன்று வீச்சு நோய்க்கான தடுப்பூசி திட்டம், நான்கு மாதங்களுக்கு ஒருமுறை செயல்படுத்தப்படுகிறது.
மேலும், நான்கு மாதம் முதல் 8 மாத வயதுடைய கிடேரி கன்றுகளுக்கு கருச்சிதைவு நோய்க்கான தடுப்பூசி போடுவது அவசியம். கிடேரி கன்றுகளுக்கு ஒருமுறை வாழ்நாள் தடுப்பூசி அளிக்கப்படுவதால், நீண்டகால நோய் எதிர்ப்பு சக்தியை உறுதிப்படுத்துகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், கன்று வீச்சு நோய் தடுப்பூசி திட்ட முகாம், கடந்த 18ம் தேதி துவங்கி வரும் அக்டோபர் 15ம் தேதி வரை 28 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு, நோய் தடுப்பூசி செலுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.