sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

/

வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்


ADDED : டிச 18, 2024 06:07 AM

Google News

ADDED : டிச 18, 2024 06:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார் : வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி, எறையானுார், எடையான்குளம் கிராம மக்கள் புதுச்சேரி - திண்டிவனம் புறவழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த எறையானுார், எடையான்குளம் ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் நேற்று காலை 10:30 மணியளவில், ஊராட்சி தலைவர் கெஜலட்சுமி ரமேஷ் தலைமையில் வெள்ள நிவாரணம் கேட்டு புதுச்சேரி - திண்டிவனம் புறவழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த கிளியனுார் போலீசார் மற்றும் திண்டிவனம் தாசில்தார் சிவா ஆகியோர் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, அனைத்து பகுதிகளிலும் நிவாரணம் வழங்கப்படுகிறது. எங்களுக்கு மட்டும் வெள்ள நிவாரணம் வழங்காதது ஏன் எனக்கேட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

அப்போது தாசில்தார், பாதிப்பு இருந்தால் கணக்கெடுப்பு நடத்தி விரைவில் நிவாரணம் வழங்குவதாக உறுதியளித்தார். இதையேற்று 10:50 மணியளவில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us