sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சிமெண்ட் சாலை அமைக்க கிராம மக்கள் கோரிக்கை

/

சிமெண்ட் சாலை அமைக்க கிராம மக்கள் கோரிக்கை

சிமெண்ட் சாலை அமைக்க கிராம மக்கள் கோரிக்கை

சிமெண்ட் சாலை அமைக்க கிராம மக்கள் கோரிக்கை


ADDED : பிப் 11, 2024 10:18 PM

Google News

ADDED : பிப் 11, 2024 10:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனம் அருகே தென்நெற்குணம் பகுதியில் சிமெண்ட் சாலை போட வலியுறுத்தி பொது மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டிவனம் அருகே தென்நெற்குணம் கிராம பஞ்சாயத்தில், 6வது வார்டிலுள்ள மாதாக்கோவில் முதல் மாரியம்மன் கோவில் தெரு வரையில், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் சிமெண்ட் சாலை அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இந்த சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு தாரர்களால் சாலை போட முடியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் தாசில்தார் உத்தரவின் பேரில், சர்வேயர் மூலம் அளந்து கல் நட்டப்பட்டது. இந்த கல்லை சிலர் அப்புறப்படுத்தியதாக கூறப்படுகின்றது.

இதை தொடர்ந்து 6வது வார்டு உறுப்பினர் ராஜீ தலைமையில் பொதுமக்கள் திண்டிவனம் தாலுா கா அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது .இதை தொடர்ந்து தாசில்தார் சிவா நடத்திய பேச்சுவார்த்தையில், இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகு நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.






      Dinamalar
      Follow us