/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பஸ் வசதி கேட்டு கிராம மக்கள் மனு
/
பஸ் வசதி கேட்டு கிராம மக்கள் மனு
ADDED : ஆக 26, 2025 06:15 AM

விழுப்புரம் : பஸ் வசதிக்கேட்டு, கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
செஞ்சி அடுத்த வவ்வால்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனு:
எங்கள் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களில், 2000 பேர் வசிக்கின்றோம். எங்கள் பகுதிக்கு இதுவரை பஸ் வசதி ஏற்படுத்தி கொடுக்கவில்லை. அணிலவாடி வரை பஸ்சில் வந்து, அங்கிருந்து எங்கள் கிராமத்திற்கு 2 கி.மீ., துாரம் நடந்து வருகிறோம்.
இதனால், முதியோர், பள்ளி மாணவ, மாணவிகள் சிரமப்படுகின்றனர். எங்கள் கிராமம் வழியாக செஞ்சியில் இருந்து- மேல்கூடலுார் சென்ற 15 என்ற அரசு பஸ்சையும் நிறுத்தி விட்டனர்.
எனவே, 50 ஆண்டுகளாக பஸ் வசதியில்லாத எங்கள் கிராமத்திற்கு பஸ் வசதி ஏற்படுத்திக்கொடுக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.