sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சுடுகாட்டிற்கு இடம் கேட்டு கிராம மக்கள் மறியல்

/

சுடுகாட்டிற்கு இடம் கேட்டு கிராம மக்கள் மறியல்

சுடுகாட்டிற்கு இடம் கேட்டு கிராம மக்கள் மறியல்

சுடுகாட்டிற்கு இடம் கேட்டு கிராம மக்கள் மறியல்


ADDED : செப் 28, 2024 04:56 AM

Google News

ADDED : செப் 28, 2024 04:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே சுடுகாட்டிற்கு இடம் ஒதுக்கி தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பெரியதச்சூர் அடுத்த ரெட்டணை புதுக்காலனியைச் சேர்ந்தவர் ராஜீ, 42; கூலித் தொழிலாளி. இவர் நேற்று காலை மாரடைப்பால் இறந்தார். இவரது உடலை அடக்கம் செய்ய சுடுகாடு இல்லாததால் அப்பகுதி மக்கள் திரண்டு கூட்டேரிப்பட்டு சாலையில் காலை 8.00 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த பெரியதச்சூர் சப் இன்ஸ்பெக்டர் சீனுவாசன், வி.ஏ.ஓ., லோகு, ஊராட்சி தலைவர் குமுதா ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் கோரிய இடத்தில் அளவீடு செய்து இடம் ஒதுக்கி தந்தனர். இதையடுத்து 9:00 மணியளவில் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.






      Dinamalar
      Follow us