sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மகப்பேறு இறப்பு விகிதம் குறைப்பில் விழுப்புரம் மாவட்டம் இரண்டாமிடம் கலெக்டர் பழனி பெருமிதம்

/

மகப்பேறு இறப்பு விகிதம் குறைப்பில் விழுப்புரம் மாவட்டம் இரண்டாமிடம் கலெக்டர் பழனி பெருமிதம்

மகப்பேறு இறப்பு விகிதம் குறைப்பில் விழுப்புரம் மாவட்டம் இரண்டாமிடம் கலெக்டர் பழனி பெருமிதம்

மகப்பேறு இறப்பு விகிதம் குறைப்பில் விழுப்புரம் மாவட்டம் இரண்டாமிடம் கலெக்டர் பழனி பெருமிதம்


ADDED : பிப் 11, 2024 02:58 AM

Google News

ADDED : பிப் 11, 2024 02:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட சுகாதார பேரவை ஆய்வுக் கூட்டம் கலெக்டர் பழனி தலைமையில் நடந்தது.

தமிழகத்தில் பொது மக்களின் சுகாதாரத்தினை மேம்படுத்தும் பொருட்டு, உலக வங்கியின் துணையுடன், அரசு சுகாதார சீரமைப்பு திட்டத்தினை 2019ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. அதன்படி, இந்தாண்டுக்கான கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் சுகாதாரத்துறை மற்றும் முக்கிய துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், கலெக்டர் பழனி பேசுகையில், 'சுகாதாரத் துறையில் மாவட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக மகப்பேறு இறப்பு விகிதம் குறைந்து தமிழகம் 66 சதவீதம் உள்ளது. அதில் விழுப்புரம் மாவட்டம் 24 சதவீதம் பெற்று, மாநிலத்தில் 2ம் இடம் பெற்றுள்ளது. குழந்தைகள் இறப்பு விகிதத்தில், நமது மாவட்டம் 8.7 சதவீதம் பெற்றுள்ளது' என்றார். நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் லட்சுமணன், துணை இயக்குனர் செந்தில்குமார், அரசு மருத்துவக்கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) திலகவதி, துணை இயக்குனர் சுதாகர் உள்ளிட்ட முக்கிய துறை சார்ந்த அலுவலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us