sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விநாயகர் ஊர்வலத்தின் போது டாஸ்மாக்கை மூட வேண்டும் : கலெக்டர் தலைமையில் முடிவு

/

விநாயகர் ஊர்வலத்தின் போது டாஸ்மாக்கை மூட வேண்டும் : கலெக்டர் தலைமையில் முடிவு

விநாயகர் ஊர்வலத்தின் போது டாஸ்மாக்கை மூட வேண்டும் : கலெக்டர் தலைமையில் முடிவு

விநாயகர் ஊர்வலத்தின் போது டாஸ்மாக்கை மூட வேண்டும் : கலெக்டர் தலைமையில் முடிவு


ADDED : ஆக 28, 2011 11:18 PM

Google News

ADDED : ஆக 28, 2011 11:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலத்தின் போது வழியில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டுமென கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

விநாயகர் சதுர்த்தி விழா வரும் 1ம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் மணிமேகலை தலைமை தாங்கினார். பி.ஆர்.ஓ., லிங்கம், தாசில்தார் ஜவகர், பரந்தாமன், டவுன் டி.எஸ்.பி., சேகர். கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., சரவணக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடத்துபவர்கள் சம்மந்தபட்ட போலீஸ் ஸ்டேஷனில் விவரம் அளிக்க வேண்டும். விநாயகர் சிலை ஊர்வலம் வழக்கமாக செல்லும் வீதியின் வழியாக கொண்டு செல்ல வேண்டும். சிலைகளை கடலில் கரைக்கும் போது அவற்றின் மேலே உள்ள துணிகள் மற்றும் அலங்கார பொருட்களை கரையில் அப்புறப்படுத்திட வேண்டும். ஊர்வலத்தின் போது சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும். ஊர்வலத்தின் போது வழியில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என்பது உள்ளிட்ட முடிவுகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.








      Dinamalar
      Follow us